Sunday, July 1, 2012

மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே

Album:-Saguni
Singers:- Sonu Nigam, Saindhavi
Music:- G. V. Prakash Kumar
Lyrics:- Na. Muthukumar


மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே
என் நெஞ்சில் வந்து தங்கி சாரல் அடித்தாய்
என்னாகும் உயிரே உயிரே....
என் கண்ணில் வந்து நின்று என்னை பறித்தாய்
என்னாகும் உயிரே உயிரே....!
இரவில் வந்தது சந்திரனா
என் அழகே வந்தது உன் முகம்தான்
வெண்ணிலவோ வளர்ந்ததும் தேய்ந்திடுமே
உன் அழகோ தேய்ந்திடாத வெண்ணிலா
பகலில் இருப்பது சூரியனா
என் அழகே உன் இரு பார்வைகள்தான்
உன் இமைகள் போரிடும் ஆயுதம் தான்
என்னுயிரே என்னை என்ன செய்கிறாய்
மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே
வானில் போகும் பறவைகளாய் நீயும் நானும் திரிந்திடலாம்
உலகையே மறக்கலாம்
வேறு வேறு விண்வெளியில் மாறி மாறி திரிந்திடலாம்
பறக்கலாம் மிதக்கலாம்
காற்றாகி கைகோர்த்து போவோமே
முகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடுவோம்
கனவில் வருவது சாத்தியமா
என் எதிரே நடப்பது மந்திரமா
நான் பார்க்கும் காட்சிகள் தந்திரமா
என் தேகம் எங்கும் நீந்தி போகுதோ
கனவில் வாழ்வது சாத்தியமே
என் கனவும் பலிப்பது நிச்சயமே
உன் விரலை பிடிப்பேன் இக்கணமே
உன் உருவம் எங்கும் இன்றும் வாழுமே
மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே
காதலாகி கரைந்துவிட்டால் காலம் நேரம் மறந்திடுமே
வானிலை மாறுமே....
ஏழு வண்ண வானவிலில் நூறு வண்ணம் தோன்றிடுமே
யாவுமே மாயமே
வெயிலோடு மழை வந்து தூறுமே
முகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடுவோம்

தரையில் விண்மீன் வருவதில்லை
வந்தாலும் கண் அதை பார்ப்பதில்லை
பார்த்தாலும் கை அதை தொடுவதில்லை
தொட்டாலோ என்ன ஆகும் என் மனம்
தரையில் விண்மீன் வருவதுண்டு
வந்தாலும் கண் அதை பார்ப்பதுண்டு
பார்த்தாலும் கை அதை தொடுவதுண்டு
தொட்டாலோ காதல் ஆகும் உன் மனம்

மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே

Video Link



நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை


Album:-Varanam Aayiram
Singers:- Hariharan
Music:- Harris Jeyaraj
Lyrics:- Thamarai


நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை.. நீருக்குள் மூழ்கிடும் தாமரை..
சட்டென்று மாறுது வானிலை.. பெண்ணே உன் மேல் பிழை..
நில்லாமல் வீசிடும் பேரலை.. நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை..
பொன் வண்ணம் சூடிய காரிகை.. பெண்ணே நீ காஞ்சனை..
ஒ ஷாந்தி ஷாந்தி ஒ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி..
ஏன் சென்றாய் சென்றாய் என்னை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி..
நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை.. நீருக்குள் மூழ்கிடும் தாமரை..
சட்டென்று மாறுது வானிலை.. பெண்ணே உன் மேல் பிழை..
ஏதோ ஒன்று என்னை ஈர்க்க.. மூக்கின் நுனி மர்மம் சேர்க்க..
கள்ளத்தனம் ஏதும் இல்லா.. புன்னகையோ போகன்வில்லா..
நீ நின்ற இடம் என்றால் விலை ஏறி போகாதோ
நீ செல்லும் வழி எல்லாம் பனிக்கட்டி ஆகாதோ 
என்னோடு வா வீடு வரைக்கும்..
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்..
இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னல் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னல் நெஞ்சே போகாதே.. போகாதே..
நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை.. நீருக்குள் மூழ்கிடும் தாமரை..
சட்டென்று மாறுது வானிலை.. பெண்ணே உன் மேல் பிழை.. ஒ. ஒ..
நில்லாமல் வீசிடும் பேரலை.. நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை..
பொன் வண்ணம் சூடிய காரிகை.. பெண்ணே நீ காஞ்சனை..
தூக்கங்களை தூக்கி சென்றாய்.. தூக்கி சென்றாய்..
ஏக்கங்களை தூவி சென்றாய்..
உன்னை தாண்டி போகும் போது..  போகும்  போது..
வீசும் காற்றின் வீச்சு வேறு..
நில் என்று நீ சொன்னால் என் காலம் நகரதே..
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே..
காதல் எனை கேட்க வில்லை.. கேட்டால் அது காதல் இல்லை..
என் ஜீவன் ஜீவன் நீதானே.. என தோன்றும் நேரம் இதுதானே..
நீ இல்லை இல்லை என்றலே.. என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே..
நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை.. நீருக்குள் மூழ்கிடும் தாமரை..
சட்டென்று மாறுது வானிலை.. பெண்ணே உன் மேல் பிழை..
நில்லாமல் வீசிடும் பேரலை.. நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை..
பொன் வண்ணம் சூடிய காரிகை.. பெண்ணே நீ காஞ்சனை..
ஒ ஷாந்தி ஷாந்தி ஒ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி..
ஏன் சென்றாய் சென்றாய் என்னை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி..
Video Link