Sunday, July 1, 2012

நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை


Album:-Varanam Aayiram
Singers:- Hariharan
Music:- Harris Jeyaraj
Lyrics:- Thamarai


நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை.. நீருக்குள் மூழ்கிடும் தாமரை..
சட்டென்று மாறுது வானிலை.. பெண்ணே உன் மேல் பிழை..
நில்லாமல் வீசிடும் பேரலை.. நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை..
பொன் வண்ணம் சூடிய காரிகை.. பெண்ணே நீ காஞ்சனை..
ஒ ஷாந்தி ஷாந்தி ஒ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி..
ஏன் சென்றாய் சென்றாய் என்னை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி..
நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை.. நீருக்குள் மூழ்கிடும் தாமரை..
சட்டென்று மாறுது வானிலை.. பெண்ணே உன் மேல் பிழை..
ஏதோ ஒன்று என்னை ஈர்க்க.. மூக்கின் நுனி மர்மம் சேர்க்க..
கள்ளத்தனம் ஏதும் இல்லா.. புன்னகையோ போகன்வில்லா..
நீ நின்ற இடம் என்றால் விலை ஏறி போகாதோ
நீ செல்லும் வழி எல்லாம் பனிக்கட்டி ஆகாதோ 
என்னோடு வா வீடு வரைக்கும்..
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்..
இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னல் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னல் நெஞ்சே போகாதே.. போகாதே..
நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை.. நீருக்குள் மூழ்கிடும் தாமரை..
சட்டென்று மாறுது வானிலை.. பெண்ணே உன் மேல் பிழை.. ஒ. ஒ..
நில்லாமல் வீசிடும் பேரலை.. நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை..
பொன் வண்ணம் சூடிய காரிகை.. பெண்ணே நீ காஞ்சனை..
தூக்கங்களை தூக்கி சென்றாய்.. தூக்கி சென்றாய்..
ஏக்கங்களை தூவி சென்றாய்..
உன்னை தாண்டி போகும் போது..  போகும்  போது..
வீசும் காற்றின் வீச்சு வேறு..
நில் என்று நீ சொன்னால் என் காலம் நகரதே..
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே..
காதல் எனை கேட்க வில்லை.. கேட்டால் அது காதல் இல்லை..
என் ஜீவன் ஜீவன் நீதானே.. என தோன்றும் நேரம் இதுதானே..
நீ இல்லை இல்லை என்றலே.. என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே..
நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை.. நீருக்குள் மூழ்கிடும் தாமரை..
சட்டென்று மாறுது வானிலை.. பெண்ணே உன் மேல் பிழை..
நில்லாமல் வீசிடும் பேரலை.. நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை..
பொன் வண்ணம் சூடிய காரிகை.. பெண்ணே நீ காஞ்சனை..
ஒ ஷாந்தி ஷாந்தி ஒ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி..
ஏன் சென்றாய் சென்றாய் என்னை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி..
Video Link

No comments:

Post a Comment