Friday, October 26, 2012

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்



Album:-Ninavellam Nithya
Singers:- S. Janaki, SPB
Music:- Ilayaraja
Lyrics:- Vairamuthtu



ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என் ஊஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள் ஆ ஹா
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்

இலைகளில் காதல் கடிதம்
வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும்
இளமை வரையும் ஓர் கவிதை

இலைகளில் காதல் கடிதம்
வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும்
இளமை வரையும் ஓர் கவிதை

மௌனமே சம்மதம் என்று ஹா
தீண்டுதே மன்மத வண்டு ஹா
மௌனமே சம்மதம் என்று 
தீண்டுதே மன்மத வண்டு 
பார்த்தாலே தள்ளாடும் பூஞ்செண்டு

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என் ஊஞ்சல்

வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது
உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும்
மகிழ்ந்து உனக்கு வேராவேன்

வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது
உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும்
மகிழ்ந்து உனக்கு வேராவேன்

பூவிலே மெத்தைகள் தைப்பேன் ஹா
கண்ணுக்குள் மங்கையை வைப்பேன் ஹா
பூவிலே மெத்தைகள் தைப்பேன் 
கண்ணுக்குள் மங்கையை வைப்பேன் 
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் ஆ ஹா

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என் ஊஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள் 
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்

No comments:

Post a Comment